Latest Tamil Jokes

தமிழ் ஜோக்ஸ்(tamil jokes)


"உன்னோட மாமியார் கிணத்திலே விழுந்திட்டாளாமே. அப்புறம் என்ன ஆச்சு?"
 "நான் பக்கத்து வீட்டு கிணத்திலேதான் தண்ணி எடுத்துக்கிறேன்!"
________________________________________
"உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே?"
 "நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் அதான்."
________________________________________
"உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்சினையா டாக்டர்?" "ஆமா.. ஏன் கேட்கிறீங்க?"
 "என்னோட சொத்தைப் பல்லை எடுக்கச் சொன்னா, நைஸா தங்கப் பல்லை எடுத்துட்டீங்களே!"
________________________________________
"நேருக்கு நேரா பேயைப் பார்த்தாக்கூட அதோ போறானே அவன் பயப்படமாட்டான்." 
"ஏன்..?"
 "அவன் சினிமா நடிகைகளுக்கு மேக்கப் மேனாக பத்து வருஷமா இருக்கிறான்."-------------
--------------------------------------------------------------------------------------------------------------
"டாக்டரும், பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன்?" 
"ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம்!"

படம் பூரா தமிழ் வசனம் இருந்தா ..!


ரசிகர்: தமிழ் படத்துக்கும் டப்பிங் படத்துக்கும் என்ன வித்தியாசம்? இயக்குநர்: கொஞ்சம் தமிழ். நிறைய இங்கலீஸ் இருந்தா அது தமிழ் படம். படம் பூராவும் தமிழ் வசனம் இருந்தா அது டப்பிங் படம். ...

குஷ்புவா, கலா மாஸ்டரா?

வக்கீல் 1: பார் கவுன்சிலை திறந்து வைக்க ஜட்ஜை கூப்பிட்டிருக்கோம் வக்கீல் 2: குஷ்புவா, கலா மாஸ்டரா? ...

திருச்சி இன்டர்வியூவுக்கு ஏன் போகலை...

நண்பன் 1: திருச்சி இன்டர்வியூக்கு நீ ஏன் போகலை நண்பன் 2: அது வாக் இன் இன்டர்வியூவாம் அவ்வளவு தூரம் எப்படி நடக்கிறதுன்னு விட்டுட்டேன். ...

மெதுவா பேசு... !

தோழி: பிச்சைக்காரனை உட்கார வச்சு சோறு போடுறியே ஏன்? நடிகை: மெதுவா பேசு அவர்தான் என்னை வைச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்...

''ஏன் செக்ஸ் எஜூகேசன் கோர்சை எடுத்திட்டீங்க?''

நிருபர்: உங்க காலேஜ்ல ஏன் செக்ஸ் எஜூகேசன் கோர்சை எடுத்திட்டீங்க கல்லூரி முதல்வர்: எல்லோரும் பிராக்டிகல் கிளாஸ் கேட்கறாங்க சார் ...

மாமியார் முகத்துல சுருக்கம்


மஞ்சு: உன் மாமியார் முகத்ல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்? அஞ்சு: முகத்துல சுருக்கம் விழுதுன்னு சொன்னாங்க அதான். ...

டோர் டெலிவரி


நண்பன் 1: ஆஸ்பத்திரிக்கு என் மனைவியை கூட்டிட்டு போகும் போது வாசல்படியிலேயே பிரசவம் ஆயிடுச்சு நண்பன் 2: அடடே பரவாயில்லையே! அப்ப டோர் டெலிவரின்னு சொல்லு...! ...

காலைப் பார்த்து சொல்லு...!


ஆசிரியர் : இந்தப் பறவையோட காலைப் பார்த்து இ‏து என்ன பறவை‎ன்னு சொல்லு மாணவன் : தெரியலை சார் ஆசிரியர் : ‏இது கூட தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உ‎ன் பேரு என்னடா? மாணவன் : எ‎ன் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்..!! ஆசிரியர் : ?!.... ?!.... ...

நான் ஒன்னோட புருஷன்!


டிவி காம்பியர் : ஹலோ வணக்கம்.. நீங்க எங்கே இருக்கீங்க..? நேயர் : தண்டபாணி தெரு, டி.நகர் டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். உங்க டோர் நம்பர்? நேயர் : 110 டிவி காம்பியர் : அட.. நானும் அங்கதான் இருக்கேன். நீங்க யாரு? நேயர் ...

தடவிக் கொடுக்கணும்….

மனைவி : மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க? கணவன் : தலைவலிச்சா இதை எடுத்து தடவனும்னு டாக்டர்தான் சொன்னார்! அதான் . ...

மாறி மாறி சிரிச்சுக்குவோம்....


நண்பன் 1 : எப்டிடா மாப்ள உன் வீட்ல மட்டும் எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குது? நண்பன் 2 : என்னோட மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா. நண்பன் 1 : !!!!!!..... ...

மனைவிக்கு அர்ச்சனை


பூசாரி : உங்க மனைவி பேர்ல தினமும் கோவில்ல அர்ச்சனை பண்றீங்களே அவ்வளவு பாசமா? கணவர் : அட நீங்க வேற ! வீட்ல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, அதான் நான் திருப்பி பண்றேன்! ...

டாக்டருக்கே சந்தேகமா?


நோயாளி : ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருக்காரே.. ஏன்? நர்ஸ் : கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்! நோயாளி : ?!?!.... ...

அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?


நோயாளி: டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல ‏இருக்கு. டாக்டர்: அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்? ...

லவ் லெட்டர் எழுதலாம்

நண்பன் 1 : லவ்லட்டருக்கும் , எக்ஸாம் ' க்கும் என்ன வித்தியாசம் ? நண்பன் 2 : மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா லவ் லெட்டர்ல எழுத வராது... ஆனா மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... எக்ஸாம்ல நிறைய எழுதுவோம்... ...

முடியுமா? முடியாதா?


காதலி : முடியாது என்று சொல்பவன் முட்டாள்.... காதலன் : முடியும் என்று சொல்பவன் தான் புத்திசாலி... காதலி : இப்ப சொல்லுங்க...என் " செல் " லுக்கு டாப்அப் பண்ணமுடியுமா...முடியாதா... ? ...

நாங்க எதுக்கு இருக்கோம்?


நோயாளி : டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல ‏இருக்கு. டாக்டர் : அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்? ...

என்ன ஒரு மருமகள்?


தோழி 1: என்னாச்சுடி, உன் உதடு இப்படி வீங்கி இருக்கு? தோழி 2: தேளுக்கு முத்தம் கொடுத்தேன், கொட்டிடுச்சு தோழி 1: லூசாப்பா நீ, யாராவது தேளுக்கு முத்தம் கொடுப்பாங்களா? தோழி 2: நீ வேற, அது என் மாமியாரைக் கொட்டிய சந்தோஷத்துல அதுக்கு முத்தம் கொடுத்தேன். என்னையும் கொட்டிடுச்சு...

சோம்பேறிக் காதலன்!!


தோழி 1 : அடிக்கடி 'லவ் லெட்டர்' தர்ற உன் லவ்வரை ஏண்டி சோம்பேறின்னு சொல்லுற? தோழி 2 : அட போடி, அது எல்லாம் ஜெராக்ஸ் காப்பிடி! ...

பல்லி விழும் பலன்


கணவன்: ரொம்ப நேரமா காலெண்டர் பாக்கிறயே அப்படி என்னப்பாக்குற ? மனைவி: பல்லி விழும்பலன் கணவன்: கொண்டா.. நான்பாக்குறேன்... அதுசரி... பல்லி எங்க விழுந்தது ? மனைவி: நீங்க சாப்பிட்டசாம்பார்ல விழுந்துருச்சிங்க ...

ஓவர் கம்பேரிசன்


மகன்: அப்பா! எப்பவுமே என்னைய பக்கத்து வீட்டுப்பொண்ணோடகம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்பபாரு... அவ 470 மார்க்... நான் 480... மார்க். அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா.... நீ 2 படிக்கிறடா ...

புரியாத முட்டாள்கள்


ஆசிரியர் : யார் ஒருவரால் தன்னுடைய வார்த்தைகளை புரியவைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்... மாணவர்கள்: புரியல சார்... ...

ராமராஜனும் நமீதாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டா...?

ரசிகர் 1 : ராமராஜனும் நமீதாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன நன்மை கிடைக்கும் ? ரசிகர் 2 : புரியலையே....? ரசிகர் 1 : ரொம்ப சிம்பிள் அவங்களுக்கு லாண்ட்ரி பில்லே வராது....!. ...

பின்னால் வரும் கழுதை


தோழி 1 : என்னடி, எப்ப பார்த்தாலும் ஒரு கழுதை உன் பின்னாடியே வந்துட்டு இருக்கு? தோழி : 2 என் எ‌தி‌ர்‌த்த வீட்டு பைய‌ன் குடுத்த லவ் லெட்டரை இதுகிட்ட தா‌ன் தின்ன கொடுத்தேன். அதா‌ன்... அவன மாதிரியே இதுவும் பின்னாடியே வருது ...

தங்கப்பல்லை பிடிங்கிட்டீங்களே

நோயாளி : உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்சினையா டாக்டர்? பல் டாக்டர் : ஆமா.. ஏன் கேட்கிறீங்க? நோயாளி : என்னோட சொத்தைப் பல்லை எடுக்கச் சொன்னா, நைஸா தங்கப் பல்லை எடுத்துட்டீங்களே! ...

சூப்பர் ரிங்டோன்

தோழி 1 : உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே? தோழி 2 : நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் அதான். ...

கிணற்றில் விழுந்த மாமியார்


மருமகள் 1 : உன்னோட மாமியார் கிணத்திலே விழுந்திட்டாளாமே. அப்புறம் என்ன ஆச்சு? மருமகள் 2 : நான் பக்கத்து வீட்டு கிணத்திலேதான் தண்ணி எடுத்துக்கிறேன்! ...

பேட்டரி லோ....!


பொண்ணு - என்னோட மொபைல் எப்பவுமே என்னோட அம்மா கையில்தான் இருக்கும். பையன் - அய்யோ, நான் போன் பண்றப்ப என்னோட பெயர் வருமே...கண்டுபிடிச்சுட்டா...? பொண்ணு -உன்னோட பெயரை நான் 'பேட்டரி லோ' அப்படின்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன். உன்னோட போன் வந்தா அம்மா போனை என்கிட்ட கொடுத்து சார்ஜ் போட சொல்வாங்க. நான் ரூமுக்குள்ள போய் உன்கிட்ட பேசுவேன்..எப்பூடி...! ...

கொடுத்து வச்சவன்டா!

நண்பன் 1: என்னடா உனக்கு கல்யாணம் ஆயிருச்சா? நண்பன் 2: கல்யாணம் ஆகி தலை பிரசவத்துல என் மனைவி இறந்து போயிட்டாடா! நண்பன் 1: கொடுத்து வச்சவண்டா நீ! ஆனால் என் மனைவி இன்னும் உயிரோடதான் இருக்கா! ...

சந்தோசத்தை கொண்டாடுறான்..!


மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவருதான் என்னை பொண்ணு பார்க்க வந்தாரு. நான் பிடிக்கலைன்னு சொன்னதுனால அதை நினைச்சே தண்ணியடிக்க ஆரம்பிச்சுட்டாரு. கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடுறான். ...

பேயைப் பார்த்து பயப்படாதவன்!

ஒருவன்: அதோ போறானே அவன் நேருக்கு நேரா பேயைப் பார்த்தாக்கூட பயப்படமாட்டான். மற்றவன்: எப்படி சொல்ற ஒருவன்: அவன் சினிமா நடிகைகளுக்கு மேக்கப் மேனாக பத்து வருஷமா இருக்கிறான். ...

இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?


மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க? கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும். மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா? கணவன்: சொல்ல முடியாது ஏன்னா பைத்தியம் என்ன பண்ணும்னு தெரியாதே! ...

உன்னையப் பொண்ணு பார்க்கும்போது மட்டும்...!

மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க? கணவன்: எனக்கு உன்னைய பொண்ணு பார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!! அதான் இப்ப அவனை மாட்டி விட்டுட்டேன். ...

போலீஸ்ல சிக்குவேனா?


ஜோசியக்காரர் : உங்க மனைவி இன்னும் ஒரு மாசத்துல இறந்துடுவாங்க வந்தவர் : அதான் எனக்கு தெரியுமே ! நான் போலீஸ்ல சிக்குவேனான்னு மட்டும் பார்த்து சொல்லுங்க! ...

போனா போகட்டும்


மருமகள் 1 : என்னோட மாமியார் நேத்து கிணத்துல விழுந்துட்டாங்க ! மருமகள் 2 : ஐயோ ! மீட்பு படைக்கு போன் பண்ணியா? மருமகள் 1 : நானே போய் எப்படி போன் பண்ணணும்னு விட்டுட்டேன். ...

இதெல்லாம் ஓவர்

நோயாளி : வயசான காலத்தில எனக்கு இந்த ஆபரேசன் தேவைதானா டாக்டர்? டாக்டர் : அப்படின்னா ஆபரேசனுக்கு கட்ட வேண்டிய பணத்தை கொடுத்திடுங்க நான் உங்களை விட்டுடறேன். ...

பொண்டாட்டியை பிடிக்கலை


நண்பர் 1 : எம் பொண்டாட்டியை எங்கம்மாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கலையாம். நண்பர் 2 : எதனால? நண்பர் 1 : உப்புக்கு கூட, எம் பொண்டாட்டி அவங்க கிட்ட சண்டை போட்டதில்லையாம்! ...

கல்யாண சீன் படம்


நிருபர் : இந்த படத்தில ஏன் இத்தனை கல்யாண சீன் வச்சிருக்கீங்க? இயக்குநர் : படத்தோட பேர் ஒரு நடிகையின் கதை அதான் ...

காதல் எத்தனை காதல்


காதல் எத்தனை காதல் ரசிகர் 1 : பிரபுதேவா தன்னோட அடுத்த படத்துக்கு என்ன தலைப்பு வைப்பார்? ரசிகர் 2 : காதல் எத்தனை காதலடா - ன்னு வைப்பார் பாரேன் ...

ஞாபக மறதி கேஸ்


நடிகை : வர வர எனக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு சார் இயக்குநர் : எப்படி சொல்றீங்க? நடிகை : கல்யாணம் முடிஞ்சு மூணு மாசம் ஆகியும் இன்னமும் அவரை டைவர்ஸ் பண்ணாம இருக்கேனே அதான்!. ...

பேராசை பெருநஷ்டம்


நண்பன் 1 : ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம் நண்பன் 2 : நான் சொல்றதை என் மனைவி கேட்கணும்னு நினைச்சா அது ஆசை ! என் மாமியாரும் கேட்கணும்னு நினைச்சா அது பேராசை !! ...

சினிமா பாட்டு

நண்பர் : என்ன உங்க பையன் இவ்ளோ பெரியவனா இருந்துட்டு வாயிலை வண்டி ஓட்டுறான் பையனின் தந்தை : அட நீங்க வேற அவன் புது சினிமா பாட்டை பாடிட்டு இருக்கான் சார். ...

அடிச்சா கத்தாதீங்க


கணவன் : இனிமே நமக்குள்ள நடக்கிற விசயம் நாலுபேருக்கு தெரியற மாதிரி நடந்துக்க வேணாம்! மனைவி : நீங்கதான் பெருசா சொல்றீங்க. ஆனா நான் அடிச்சா ஊருக்கே கேட்குற மாதிரி கத்தறீங்களே! ...

மொய் லெட்டர்

மகேஷ் : மொய் கவர்ல என்னமோ லெட்டர் இருக்கே என்ன அது? சுரேஷ் : திருடு போன செருப்புக்கு நஷ்ட ஈடு கொடுத்தால் மொய் எழுதப்படும்னு யாரோ லெட்டர் போட்டிருக்காங்க. ...

2 ஜி நினைவுக்கு வருது


தொண்டர் 1 : அந்த வடநாட்டுத் தலைவர் நம்ம தலைவரை ஜீ ஜீன்னு சொன்னது பிடிக்கலையாம். தொண்டர் 2 : ஏன் பிடிக்கலையாம்? தொண்டர் 1 : ‘ஜீ'ன்னு கூப்பிடுறது 2 ஜியை நினைவு படுத்துதாம். ...

சூப்பர் மச்சான்!


வக்கீல் 1 : கோர்ட்ல நமீதாவை நீதிபதியா நியமிச்சா எப்படி இருக்கும்? வக்கீல் 2 : கொலை குற்றவாளியைப் பார்த்து உங்க ஆட்டிடியூட் நல்லா இருந்துச்சு ! கொலை எனர்ஜட்டிக்கா இருந்துச்சு ! கீப் இட் அப் மச்சான் ! உங்களுக்கு பத்து மார்க் தரேன்னு சொல்லுவாங்க! ...

மூளை எங்கே போச்சு ?


நோயாளி: காலில் அடிபட்டதுக்கு தலையில ஏன் எக்ஸ்ரே எடுக்கறீங்க சார் ? டாக்டர்: சாக்கடையில நீங்க காலை விட்டபோது உங்க மூளை எங்கே போச்சுன்னு பாக்க வேணாமா ? ...

தப்பா ஒரு லெட்டர்


நண்பன் 1: உங்க அப்பாகிட்ட 5000 ரூபாய் பணம் கேட்டு லெட்டர் போட்டியே, அனுப்பிட்டாரா? மகன்: பணம் வரலைடா ! நண்பன்: ஏண்டா? மகன்: 50 ரூபாய்க்கு நான்கு சைபர் போடக்கூடாதுன்னு திட்டி லெட்டர் போட்டிருக்கிறாருடா... ...

அமெரிக்காவை கண்டுபிடிக்கலை!

ஆசிரியர்: உங்க மகன் கிட்ட அமெரிக்காவை கண்டு பிடிச்சது யாருன்னு கேட்ட, 'சத்தியமா நான் இல்லவே இல்ல சார்' னு சொல்றான். தந்தை: அவன் கொஞ்ச பயந்த சுபாவம் சார்..நல்லா அதட்டி அடிச்சிக் கேளுங்க. கண்டிப்பா ஒத்துக்குவான்....

பாவம் செய்யணும்!


மகன்: அப்பா ..கடவுள் நம்ம செஞ்ச பாவங்களையெல்லாம் மன்னிக்கனும்னா என்ன செய்யணும்? அப்பா: மொதல்ல பாவம் செய்யணும்டா மகனே.. ...

என்ன மேடம் அதுக்குள்ள மறந்துட்டீங்க!

கோடீஸ்வரி கோமளவல்லி: பிச்சைக்காரரே உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே...? பிச்சைக்காரர் பிச்சமூர்த்தி: அட, என்ன மேடம் அதுக்குள்ள மறந்துட்டீங்க, பேஸ்புக்ல நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸா இருக்கோமே...! ...

நாயை வச்சு ஒரு டெஸ்ட்

நண்பர் 1 : நான் புதுசா நாய் ஒன்னு வாங்கி வந்திருக்கேன்.வந்து பார்க்கிறீங்களா? நண்பர் 2 : அந்த நாய் கடிக்குமா? நண்பர் 1: அதை தெரிஞ்சிக்கத்தான் உன்னைக் கூப்பிடுறேன். நண்பர் 2 : ?!?! ...

நக்கல்தானே வேண்டாங்கிறது


சர்வர்: சார் என்ன சாப்பிடுறீங்க? சாப்பிட வந்தவர்: என்ன நக்கலா? எதுவுமே கொண்டு வந்து கொடுக்காம என்ன சாப்பிடுறீங்கன்னு கேட்கிறயே? உனக்கு கண்ணு தெரியலையா? ...

பவர் ஸ்டாருக்கு பயம்


ரசிகர் 1: இப்பல்லாம் பவர் ஸ்டாரை வெளியே பாக்கவே முடியலையே ரசிகர் 2: தமிழ்நாட்ல பவர்கட் அதிகமா இருக்கிறதுனாலே தன்னோட பேரை யுபிஎஸ் ஸ்டார்னு மாத்திக்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கிறாராம். ...

பவரை புடுங்கியாச்சு


தொண்டர் 1: "இருந்தாலும் நம்ம அமைச்சருக்கு இவ்வளவு தில் ஆகாது" தொண்டர் 2: " ஏன் என்ன ஆச்சு?" தொண்டர் 1: சி.எம் போன் பண்ணி உங்க பவரை ஆஃப் பண்ணியாச்சுன்னு சொன்னதுக்கு, பரவாயில்ல அய்யா, வீட்ல யுபிஎஸ் இருக்கு சமாளிச்சுக்குவேன் அய்யா அப்படின்னு சொன்னாராம். ...

எல்லாத்துக்கும் அழுகைதான்!

லைன்மேன்: டிவி சீரியல்ல நடிச்சதுல இருந்து இந்த நடிகை ஒரு மாதிரியா ஆயிட்டாங்க ! நண்பர்: எதனால சொல்றே ? லைன்மேன் : போன் ‘டெட்' ஆனதுக்கு கூட ஓ ன்னு ஒப்பாரி அழறாங்க. ...

கன்னி வெடி!


வீரன்: மன்னா .... நம் அரண்மனையைச் சுற்றி எதிரிகள் கன்னிவெடி வைத்து விட்டார்களாம் ! மன்னன்: அப்படியா? வெடிகளை எடுத்துவிட்டு கன்னிகளை மட்டும் அந்தப்புரத்துக்கு கொண்டு வாருங்கள் ! ...

மாவு ஆட்டுறோம்!


அவன்: ஹோட்டல்ல சாப்பிடுறதுக்கும் வீட்டுல சாப்பிடுறதுக்கும் என்ன வித்தியாசம்? இவன்: ஹோட்டல்ல சாப்பிட்ட பின்னாடி மாவு ஆட்டுறோம். வீட்டுல மாவு ஆட்டின பிறகு சாப்பிடுவோம். ...

காட்டிக்கொடுத்த மொய் நோட்டு


நண்பர் 1: என்ன சார் என் பொண்ணு கல்யாணத்துக்கு வராம இருந்திட்டீங்களே? நண்பர் 2: என்ன இப்படி சொல்றீங்க? நான் வந்தேனே! நண்பர் 3: உங்கப் பேரை மொய் நோட்டுல பார்த்தேனே காணோமே! ...

சொர்க்கமும் நரகமும்


அவன் : சொர்க்கமும், நரகமும் நீங்க வாழற எடத்திலேயே இருக்குன்னு சொல்லீங்களே எப்படி?இவன் : என் வீட்டில தானே வேலைக்காரியும் இருக்கா என் மனைவியும் இருக்கா!அவன் : ?!?!.......

மனைவியோட ஃபேன்


ராஜா : நீங்க யாரோட ஃபேன்னு கேட்டா மனைவியோட ஃபேன்னு சொல்றீங்களே? உங்க மனைவி என்ன நடிகையா?ராகவன் : கரண்ட் இல்லாதப்ப அவளுக்கு நான்தானே விசிறி விடறேன் அதனால சொன்னேன்....

இவருக்கு பதில் இதில்


குமார் : மெகா சீரியல் தயாரிப்பாளரோட பெண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சது தப்பா போச்சு !ரவி : ஏன் என்ன ஆச்சு?குமார் : மணமேடையில வேறொரு பெண்ணை காட்டி என் பொண்ணுக்கு பதில் இவள்தான் மணமகள் அப்படின்னு சொல்லிட்டார்....

எல்லை தாண்டிய பயங்கரவாதம்

மனைவி : ஏங்க எல்லை தாண்டிய பயங்கரவாதம்னா என்னங்க ?கணவன் : நீ வைக்கிற குழம்பு வாசனை அடுத்த வீட்டு காம்பவுண்டு சுவரை தாண்டி போகுதுல்ல அதாண்டி...

தெரிஞ்ச பிசாசே மேல்


நண்பன் 1 : எதுக்குடா காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்ட ?நண்பன் 2 : தெரியாத தேவதைய கல்யாணம் பண்ணிக்கிறதை விட தெரிஞ்ச பிசாசே மேல்னு முடிவு பண்ணிட்டேன்....

இந்த மெகா சீரியலே இப்படித்தான்


மாலதி : என்னதான் மெகா சீரியல்னாலும் அதுக்காக இப்படியா?ஜானகி : ஏன் என்னாச்சு?மாலதி : டைட்டில் சாங் மட்டும் நாலு வாரமா ஓடிட்டு இருக்குன்னா பார்த்துக்கங்களேன்....

என்னைய பார்த்து சொல்லுங்க


மனைவி : வேலைக்காரிய வண்டியில உட்கார வச்சு கூட்டிட்டு போனீங்களாமே !கணவன் : எல்லாம் உனக்காகத்தான் விமலா, அவ உடம்புக்கு முடியாமப் படுத்துட்டா உனக்குத்தானே கஷ்டம்!மனைவி : அது சரி அவ தலையில பேன் பார்த்தீங்களாமே?கணவன் : அவ தலையில இருந்து உன் தலைக்கு பேன் வந்துடக் கூடாதே என்ற நல்ல எண்ணத்தில் பேன் பார்த்தேன். ...

வாயை குடுங்காதீங்க


மனைவி : என்னைய பொண்ணு பார்க்க வந்த அன்னிக்கு என்ன நினைச்சீங்க?கணவன் : வம்பை நாமளே விலை கொடுத்து வாங்கறோம்னு நினைச்சேன்மனைவி : ?????...

மோசம் போயிட்டான்


நண்பர் 1 : “நம்ம ரமேஷ் வெளிநாடு போறதுக்காக ஏஜெண்டு கிட்ட ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருந்தானே…. என்னாச்சு அவன் வெளிநாடு போயிட்டானா?நண்பர் 2 : “ ம் ஹும், மோசம் போயிட்டான் ! ”....

படுக்கிறதுல சுட்டி


நண்பர் : “ பெரிய பையன் ‘படுசுட்டி’ன்னு சொன்னீங்க. ஆனா சதா தூங்கிட்டே இருக்கானே?”பையனின் அப்பா : “படுக்கிறதுல சுட்டிங்கிறதைத்தான் சுருக்கி, படுசுட்டின்னு சொன்னேன். தப்பா?...

தலைகணம் ஜாஸ்திதான்


நிருபர் 1 : “அந்த நடிகைக்கு தான் பெரிய நடிகைங்கிற தலைகணம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு”நிருபர் 2 : “எதை வச்சு அப்படி சொல்ற ?”நிருபர் 1 : “ நீங்க இது வரைக்கும் ஏற்று நடிக்காத பாத்திரம் எது மேடம்னு கேட்டதுக்கு, அலுமினிய பாத்திரம் ஒண்ணுதான்னு பதில் சொல்றாங்க”...

துணிவே துணை


நிருபர் : ‘அந்தப் படத்தில ஒரு காட்சியில துணி இல்லாம, டைரக்டர் நடிக்கச் சொன்னதுக்கு, எப்படி மேடம் ஒத்துக்கிட்டீங்க?’ நடிகை : ‘எல்லாம் ஒரு துணிவோடதான்’...

முடியாதுன்னா முடியாதுதான்


டாக்டர்: “ உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு, தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடுங்க”நோயா‌ளி: “ என்னது தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா... எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்”.டாக்டர் : “ஏ‌ன் முடியாது?”நோயாளி: “ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம்.”...

காலாவதி தேதி இருக்கா


கணவன் ரொம்ப நேரமா அவரோட திருமண சர்ட்டிபிகேட் வச்சு பார்த்துட்டு இருந்தார்.மனைவி: “என்ன ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருக்கீங்க”கணவன்: “ஒண்ணுமில்ல!”மனைவி : “ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!”கணவன்: “ இந்த சர்டிபிகேட்ல எங்கேயாவது எக்ஸ்பயரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!”...

ஒருமணி நேரம் பொறுத்துக்கிறேன்...


மருத்துவர்: நோயாளியின் கணவரைப் பார்த்து “ உங்க மனைவி இன்னும் ஒரு மணி நேரம் தான் உயிரோட இருப்பாங்க.”கணவர்: “பரவாயில்லை டாக்டர். இத்தனை வருஷம் பொறுத்துக்கிட்டேன். இன்னும் ஒரு மணிநேரம் பொறுத்துக்க மாட்டேனா?”மருத்துவர் : ?!...?!.......

இன்னமும் நான் செலவு பண்றேன்

மகன்: “அப்பா நான் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், அதற்கு எவ்வளவு செலவாகும்?”அப்பா: "எனக்கு சரியா தெரியலைப்பா! ஏன்னா நான் இன்னமும் செலவு செய்துட்டிருக்கேன்!"மகன்: ?!....?! ...

வித்தியாசமான கணவர் வேணும்


நிருபர் : “ உங்களோட வருங்கால கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க மேடம்?”நடிகை : “ என்னோட பழைய கணவர் மாதிரியும் இல்லாம, தற்போதைய கணவர் மாதிரியும் இல்லாமா, கொஞ்சம் வித்தியாசமானவரா இருக்கணும்னு எதிர்பார்க்கிறேன்.”நிருபர் : ?!....?!.......

எறும்பு கடியா


நர்ஸ் : “ ஊசின்னா பயப்படாதீங்க! எறும்பு கடிச்ச மாதிரி இருக்கும்”….நோயாளி : “ எறும்பு கடிக்கிற மாதிரி இருக்குமா…? அச்சச்சோ வேணாம். நான் இப்ப சிகிச்சைக்கு வந்ததே எறும்பு கடிச்சதுக்குத்தான்”...

நாய்க்கு தங்க சங்கிலி


கோவிந்தசாமி : “நம்ம பரமசிவம் வீட்டு நாய் திருடு போயிடுச்சாமே?”குப்புசாமி : “பின்னே…. நாய்க்குப் போய் 22 காரட்டு தங்கத்தில கழுத்து செயின் போட்டிருந்தா திருடாம என்ன பண்ணுவாங்களாம்?”...

போலீஸ்ல மாட்டிக்கிட்டான்


அம்புஜம் : “என் பையன் போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டான்”பங்கஜம் : “ இதைப்போயி இப்படி சிரிச்சிக்கிட்டே சொல்றியே”அம்புஜம் : “ நீ வேற…! எம் பையன், பெண் போலீசை காதலிக்கிறான் அதைத்தான் அப்படிச் சொன்னேன்” ...

ஆம்பளை சிங்கம்

நண்பர் 1 : “ஆம்பளை சிங்கத்தை பெத்து வச்சிருக்கேன்னு சொன்னியே எங்க காணோம்?”நண்பர் 2: “ சர்க்கஸ் கம்பெனியில வேலைக்கு விட்டிருக்கிறேன்” ...

புது பெண்ணா புக் ஆயிட்டேன்


நிருபர் : “உங்க கணவரை டைவர்ஸ் பண்ணிட்டீங்களாமே?”நடிகை : “ ஆமாம். நான் அமெரிக்கா தொழிலதிபரோட மணப்பெண்ணா ‘புக்’ ஆயிருக்கேன் அதான். ...

டிவி யை வித்துட்டேன்


நண்பர் : “ கல்யாணமான உடனே, உங்க வீட்டு டி.வி. யை வித்துட்டியாமே.... ஏண்டா?புதுமாப்பிள்ளை : “பெண்ணை கண்கலங்காமா பாத்துக்கிறேன்னு என் மாமானார் கிட்ட சத்தியம் பண்ணியிருக்கேன் அதான். இல்லைன்னாஅவ பாட்டுக்கு சீரியல் பார்த்து அவ பாட்டுக்கு அழ ஆரம்பிச்சுடுவாளே”நண்பர் : ?!...?!..... ...

மெகா சீரியல் சத்தியம்


சுரேஷ் : “ இனிமே வாழ்க்கை முழுக்க, உம் பொண்டாட்டியும், உங்கம்மாவும் சண்டையே போட்டுக்க மாட்டாங்கன்னு எப்படி இவ்வளவு உறுதியா சொல்றே?”ரமேஷ் : “ டி.வியில புதுசா போட்டிருக்கிற மெகா சீரியல் முடியற வரைக்கும் சண்டை போடக்கூடாதுண்ணு அவங்க கிட்ட சத்தியம் வாங்கிட்டேனே” ...

பெயிலா ஜெயிலா


ரிப்போர்ட்டர் : “இது அரசியல்வாதிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்னு எதை வச்சு சொல்றீங்க?”இயக்குநர் : “படத்தோட பேரே ‘கொஞ்சம் ஜெயில் கொஞ்சம் பெயில்’னுதானே வச்சிருக்கேன்.” ...

செகண்ட் ஹீரோயின்

டைரக்டர் : “இந்த படத்தில செகண்ட் ஹீரோயின்னு சொன்னீங்களே? ஆளையே பாக்க முடியலையே ?”நடிகை : “ஒரு செகண்ட் மட்டும் தானே வர்றேன் அதைச் சொன்னேன்.” ...

தொப்புள் காட்சிக்காக லொகேசன்


ரசிகர் : “டைரக்டர் ஏன் நடிகையோட தொப்புளையே பார்த்திட்டு இருக்கார்?”துணை இயக்குநர் : “ தொப்புள் காட்சியை எடுக்க லொகேசன் பார்க்கிறாராம்”ரசிகர் : !?!? ...

குளியல் காட்சியை காணோமே


ரசிகர் 1 : “இந்த படத்துல நிறைய குளியல் காட்சிகள் இருக்குன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க !”ரசிகர் 2 : “ எப்படி?”ரசிகர் 1 : “குட்டையில எருமை மாடுகள் மொத்தமா குளிக்கிறதை அடிக்கடி காட்டுறாங்க” ...

கணவன் - ஏண்டி, நான் செத்துட்டா நீ என்ன பண்ணுவ..?

மனைவி - நானும் உங்க கூடவே செத்துப் போய்ருவேங்க.. ஆமா நான் செத்துட்டா நீங்களும் செத்துப் போயிடுவீங்களா...?கணவன் - சேச்சே, உன் தங்கச்சிக்கு வாழ்க்கை கொடுத்துக் காப்பாத்துவேன் ...

பாபு - நேத்து ஹோட்டலுக்கு சாப்பிடப் போனேன். சாப்பிட்டுட்டுப் பார்க்கிறேன். கையிலே காசே இல்லை.


கோபு - அடடே, அப்புறம் என்ன பண்ணேள், எப்படி சமாளிச்சேள்...?பாபு- வேற என்ன பண்றது, பாக்கெட்டில கையை விட்டு பர்ஸை எடுத்து, பணத்தைக் கொடுத்துட்டு வந்தேன்.! ...

அஜந்தா- ஏன் அந்த டிவி நிறுவனத்துக்கு மக்கள் படையெடுக்கிறாங்க?

மெஜந்தா - தங்களோட சானல்ல ஒளிபரப்பாகுற சீரியல பார்த்து அழுறவுங்களுக்கு வசதியா 'பத்து செட் கர்ச்சீப்' இலவசமாக தர்றாங்களாம். அதான் ஓடுறாங்க.! ...

ஊழல் அரசியல்வாதிகள்!

அந்த நாட்டு நாடாளுமன்றம் படு சூடாக இருந்தது. ஒரு எம்.பி படு ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். இந்த அவையில் உள்ள பாதிப் பேர் ஊழல்வாதிகள், கோழைகள் என்றார் கோபாவேசமாக.இதைக் கேட்டு மற்ற உறுப்பினர்கள் கொந்தளித்தனர். உடனடியாக அந்த எம்.பி. தான் பேசியதை வாபஸ் பெற வேண்டும், இல்லாவிட்டால் அவரை கூட்டத் தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று ...

அவமதிச்சுட்டீங்களே அத்தை...!

ஆஞ்சு ஓஞ்சு வீட்டுக்கு வந்தான் குமார். கதவைத் திறந்தாள் மனைவி. தனது இளம் மனைவி கண்களில் கண்ணீர் கொப்பளித்துத் ததும்பியடி நின்று கொண்டிருந்ததைப் பார்த்து கவலையானான் குமார்.குமார் - என்னடா செல்லம் ஆச்சு, ஏன் இந்த அழுவாச்சி...!மனைவி- உங்கம்மா என்னை அவமதிச்சுட்டாங்ககுமார் - எங்கம்மாவா, அவங்கதான் நம்மை விட்டு பல நூறு கிலோமீட்டர் தூரத்திலே இருக்காங்களே..!மனைவி ...

ரொம்பத் தெளிவுதான்...


சின்னச்சாமி: இந்த காது கேட்கும் கருவியை வாங்கி மாட்டிக் கொண்ட பின்னர், நாலு தெருவுக்கு அப்பால் பேசுவதைக் கூட என்னால் தெளிவாகக் கேட்க முடிகிறது.பெரியசாமி: அப்படியா, எவ்வளவு செலவாச்சு..?சின்னச்சாமி: மணியா?. 3 மணி பத்து நிமிடமாகிறது!...

நிக்கிறபோதே பிடிச்சிருக்கலாமே


ஒரு ஸ்கூலில் பிள்ளைகளை ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிப் கொண்டு போனார்கள். அங்கே மோஸ்ட் வாண்டட் கிரிமினல்களின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன.பையன் : “அங்கிள் , இவங்க போட்டோவை இங்கே ஏன் மாட்டி இருக்கீங்க”இன்ஸ்பெக்டர் : “இவங்க எல்லாம் கிரிமினல்ஸ்..இவங்களை தீவிரமா தேடிட்டு இருக்கோம்”பையன் : “அப்படீன்னா இவங்களை நிக்க வைச்சு போட்டோ எடுக்கறப...

பொய் பொம்மை


சுட்டிப்பையன் ஒருவன் ஒரு பொம்மைக் கடையில் நுழைந்து ஒரு பொம்மை விமானம் வாங்கினான். கவுன்டரில், பிள்ளைகள் வைத்து விளையாடும் விளையாட்டு பணத்தை கொடுத்து விட்டு நகர்ந்தான்.கடைக்காரன் : “ இதப் பாரு கண்ணா, என்ன இது?”சுட்டிப்பையன் : 'பணம்'கடைக்காரன் : “இது உண்மையான பணம் இல்லை”சுட்டிப்பையன் : 'அஸ்கு புஸ்கு இந்த ப்ளேன் மட்டும் என்ன உண்மையான ப்ளேனா?'...

யார் முட்டாள்


டீச்சர் : “ இங்கே யார் யார் எல்லாம் உங்களை முட்டாள்னு நினைக்கிறீங்களோ அவங்க எல்லாம் எழுந்து நில்லுங்க'”யாருமே எழுந்து நிற்கவில்லை. ஆனால் நீண்ட தயக்கத்துக்குப் பின் ஒரே ஒரு பையன் எழுந்து நின்றான்.டீச்சர் : “நீ என்ன முட்டாளா?”பையன் : “இல்லை மிஸ், நீங்க தனியா நிற்கறதைப் பார்க்க ஒரு மாதிரியா இருந்துச்சு, அதான் எழுந்தேன்”...

காரசாரமான கதை


கதாசிரியர் : இயக்குநர் சார் நல்லா கார சாரமான கதை இருக்கு சொல்லட்டுமா?இயக்குநர் : முதல்ல என்னோட அல்சர் சரியாகட்டும்...

இரண்டு திருடர்கள்

திருடன் 1 : “ திருடுவியா... திருடுவியான்னு கேட்டு போலீஸ் என்னை அடி பின்னிட்டாங்க”திருடன் 2 : “அப்புறம் என்ன சொன்னே”திருடன் 3 : “ திருடுறேன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் விட்டாங்க “...

போலீஸ் ஸ்டேசனில்


சப் இன்ஸ்பெக்டர் : “அந்த திருடன் வீட்டு முன்னாடி ஒரே போலீஸ் தலையா தெரியுதே?”ஏட்டு : “எட்டாவது மாமூல் ஊதியக் கமிஷனை அமுல் படுத்தச் சொல்லி போராட்டம் நடத்துறாங்களாம்”...

கரெக்ட்டான வார்த்தைகள்

ஆசிரியர் : “ பள்ளிக் கூடத்தில் பசங்க அடிக்கடி உபயோகப்படுத்தும் ரெண்டு வார்த்தைகளை சொல்லுங்க”மாணவன் : “எனக்குத் தெரியாது சார் “ஆசிரியர் : “கரெக்ட் உட்கார்”...

கிழிந்து போன உடை


விளையாட்டு ஆசிரியர் : “ஏண்டா எல்லோரும் ஸ்டேண்டட்டீஸ் ல நிக்கிறப்ப நீ மட்டும் ஏன் அட்டன்ஷன்ல நிக்கிறே?”மாணவன் : “ என்னோட டவுசர் கிழிஞ்சி போச்சு சார் அதான் “...

பள்ளி திறந்த உடன்


ஆசிரியர் : “ இந்த லீவுல மத்தவங்க சந்தோசப்படுற மாதிரி யாராவது நல்ல காரியம் செய்தீங்களா?”மாணவன் : “நான் செய்தேன் சார். லீவுக்கு எங்க மாமா வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கிருந்து நான் கிளம்பும்போது அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க”...

சீரியஸா ஒரு செய்தி


ஒருவர் : “உங்க தாத்தா சீரியஸ்னு தந்தி வந்திருக்காமே?”பேரன் : “ அவர் எப்பவுமே சீரியஸ்தான். ஒரு தடவையாவது அவர் கலகலப்பாக இருந்து நான் பார்த்ததில்ல”...

புலி வேட்டை!

வீரமுத்து புலி வேட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு அவரது மனைவி ஆரத்தி எடுத்து, வீரத் திலகம் எல்லாம் இட்டு பெரும் பில்ட் அப் செய்து அவரை அனுப்பி வைத்தார்.போய், புலியோடு வருகிறேன் என்று கூறிவிட்டு துப்பாக்கியோடு வாசல் வரை போன வீரமுத்து அதே வேகத்தில் திரும்பி வந்தார்.என்னங்க.. என்னாச்சு என்று மனைவி கேட்க, பதிலே சொல்லாமல் மீண்டும் ...

கந்தசாமி - நொந்தசாமி

கந்தசாமி : உங்க பையன் ஒருத்தன், சிவில் என்ஜினியரிங் படிச்சான்னு சொன்னீங்களே… இப்போ அவன் என்ன பண்றான்….?நொந்தசாமி : “ வீட்லையே பாடி பில்டிங் பண்ணிட்டு இருக்கான்”...

தெருவில் இரண்டு பேர்


ஒருவர் : “இதோ பிளாட்ஃபாரத்துல தங்கியிருக்கானே… முத்துராசு… இனிமே நாம இவனை அட்ரஸ் இல்லாத அனாதைப் பையன்னு சொல்ல முடியாது”மற்றவர் : “ ஏன் வீடு கட்டிட்டானா?ஒருவர் : “ அதில்லை இ-மெயில்ல அட்ரஸ் வச்சிருக்கானாம்”...

அலுவலகத்தில்


ஒருவர் : “ எம் பையனுக்கு அவன் மாமனார் வீட்ல, சுவீட் கடை வெச்சி கொடுத்திருக்காங்க. அதை கவனிச்சி கிட்டு அவன் அங்கேயே தங்கிட்டான்.”மற்றவர் : “ ‘சு’ வீட்டோட மாப்பிள்ளைன்னு சொல்லு”...

இரண்டு சிறுவர்கள்


அவன் : “உங்க அம்மாவுக்கு ஒரு தம்பி இருக்கிறதா சொன்னியே…. அவரு என்னவா இருக்காரு?”இவன் : “எனக்கு தாய் மாமனா இருக்கார்”...

அலுவலக நண்பர்கள்

நண்பர் 1 : உங்க ஆஃபிஸ் டைப்பிஸ்ட் ஒரு ஓட்டப்பந்தைய வீரராமே…?நண்பர் 2 : “ஆமாம் உடம்பு சரியில்லாம போனதுல இருந்து அவராலே டைப்பும் அடிக்க முடியல, ஓடவும் முடியலநண்பர் 3 : “அப்ப அவருக்கு கையும் ஓடலை, காலும் ஓடலைன்னு சொல்லுங்க!”...

சினிமா தயாரிப்பாளரும் நண்பரும்


நண்பர் : “பாயும் தோட்டா”ன்னு ஒரு படம் எடுத்தீங்களே என்ன ஆச்சு?தயாரிப்பாளர் : “கையை சுட்டுருச்சு சார்….”...

கணேஷ் அண்ட் மகேஷ்


கணேஷ் : “ நம்ம சுரேஷ் வீட்ல சமைக்கிறது, துணி துவைக்கிறது எல்லாமே அவங்க மனைவிதான் செய்வாங்களாமே?! இன்னைக்குதான் கேள்விப்பட்டேன்….”மகேஷ் : “ ஏப்ரல் 1 அதுவுமா உங்களை யாரோ நல்லா ஏமாத்தியிருங்காங்க”...

ஹோட்டலுக்கு முன்பு இருவர்


அவர் : “அந்த சினிமா டைரக்டர் ஓட்டல்ல காசில்லாம சாப்பிட்டுடாராம்.”இவர் : “ அச்சச்சோ…. அப்புறம் ?”அவர் : “ அறைச்ச மாவையே அறைச்சிக் கொடுத்திட்டு வந்தாராம்”...

கிளினிக் அருகில்

ராமு : “ டாக்டரும், பெண் தரகரும் பக்கத்து பக்கத்துல வாடகைக்கு இருக்குறது பிரச்சனையாயிடுது”சோமு : “ ஏன் என்னாச்சு?”ராமு : “ ‘கால்கட்டு’ போட வர்றவங்க ரூம் மாறி மாறி போயிடுறாங்களாம்.”...

“பெரிய ஆளா ஆயிட்டானா?”


ஒருவன் : “சாதாரண ஆளா இருந்த முனுசாமி, சீட்டு கம்பெனி ஆரம்பிச்சு இப்ப எங்கேயோ போயிட்டான்”மற்றவன் : “பெரிய ஆளா ஆயிட்டானா?”ஒருவன் : “ஊரைவிட்டு எங்கேயோ போயிட்டான்னு சொல்ல வந்தேன்”...

''கேஸ் புடிச்சிக் கொடுங்க போதும்னுட்டார்’’


ஒருவர் : “ உங்களோட டாக்டர் மாப்பிள்ளைக்கு தலை தீபாவளியாச்சே…. என்ன பண்ணப் போறீங்க….?’’நண்பர் : “ ஆபரேசனுக்கு ஏதாவது கேஸ் புடிச்சிக் கொடுங்க போதும்னுட்டார்’’...

ஆஸ்பத்திரியில்

நர்ஸ் 1 : அஜாக்கிரதையா வார்த்தை விட்டதாலே, எங்க டாக்டர் ஒரு ஆபரேசன் கேஸை மிஸ் பண்ண வேண்டியதா போச்சு”நர்ஸ் 2 : “ எப்படி?”நர்ஸ் 1 : “ இந்த ஆபரேசனுக்கு மொத்தமா எவ்ளோ செலவாகும்னு கேட்டதுக்கு, போஸ்ட் மார்டம் செலவு எல்லாம் சேர்த்து பத்தாயிரம் ரூபாய் ஆகுன்னு, பேஷன்ட் கிட்டேயே உளறித் தொலைச்சிட்டார்னா பாரேன்….” ...

இரண்டு மாமியார்கள்


மாமியார் 1 : “என்னோட புது மருகளுக்கு வீட்டு வேலை எதுவும் தெரியாது போல இருக்கு….”மாமியார் 2 : “ எப்படி சொல்றீங்க?”மாமியார் 1 : “ தயிர் தோய்க்கச் சொன்னதுக்க, வாஷிங் பவுடர் கொடுங்க அத்தேன்னு கேட்கிறாளே ?! ”...

டைரக்டரும், நண்பரும்


நண்பர் : “ உங்க படத்தில, சம்பந்தமே இல்லாமே, பாட்டி ஒரு பையனுக்கு கதை சொல்ற மாதிரியான சீனை எதுக்கு சார் சேர்த்திருக்கீங்க?”டைரக்டர்: “ படத்தில கதையே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க…!” ...

‘பொக்கை’ வாயை காட்டி சிரிச்சார்”

ஒருவர் : “ 96வது பிறந்தநாள் கொண்டாடின என்னோட தலைவருக்கு ‘பொக்கே’ கொடுத்து வாழ்த்திட்டு வரேன் சார்”மற்றவர் : என்ன சொன்னார்?ஒருவர் : “ தன்னோட ‘பொக்கை’ வாயை காட்டி சிரிச்சார்”...

ஆஸ்பத்திரிக்கு எதிரில்


ஒருவன் : “ தான் ஒரு போலி டாக்டர்ங்கிறதை, அவர் வாயாலியே உளறித் தொலைச்சிட்டார்”நண்பர் : “எப்படி?”ஒருவர் : “உங்க அப்பாவுக்கு வந்திருக்கிறது பெரிய வியாதி எதுக்கும் நீங்க டாக்டரை பார்க்கிறது நல்லதுன்னு என்கிட்ட சொன்னாரே!” ...

‘அலை’ வந்தா தான் ஜெயிக்க முடியும்!


ஒரு கட்சிக்காரர்: “ உங்க தொகுதியில, சினிமாகாரங்களை கூட்டி வந்து, ஏதோ கடல் மாதிரி செட் போட்டு வச்சிருக்காராமே… உங்க தலைவர்… ஏன்?மற்ற கட்சிக்காரர் : இந்த தொகுதியை பொறுத்த மட்டில், ஏதாவது ‘அலை’ வந்தால்தான் நீங்க ஜெயிக்க முடியும்னு தலைவர் கிட்ட யாரோ
சொன்னாங்களாம்....

எழுத்தாளரும், நிருபரும்


நிருபர் : “ உங்க தலையில முடி எப்படி கொட்டிச்சு?எழுத்தாளர் : “அதிகமா சிந்திச்சு முடி சிந்திடுச்சி” ...

''கொட்டி’ தீர்க்கிறதுதான் எங்க தலைவரோட பழக்கம்”


ஒருவர் : “எங்க தலைவருக்கு கோபம் வந்தா, பக்கத்தில இருக்கிறவன் தலையில கொட்டுவாரு…. தெரியுமா?”மற்றவர் : “ஏன் அப்படி?”ஒருவர் : “ கோபத்தை யாரிடமாவது ‘கொட்டி’ தீர்க்கிறதுதான் எங்க தலைவரோட பழக்கம்”...

''தலைவருக்கு வரவேண்டிய ஓட்டாச்சே அவ்வளவும்”

ஒருவர் : “ எங்க தலைவருக்கு வேண்டியவங்க நிறையபேர், இந்த தொகுதியில சீட்டு கம்பெனி நடத்திட்டு வந்தாங்களாம். அதான் தலைவர் சோகமா இருக்கார்.”மற்றவர் : “ அதுக்கும் இவரு சோகமா இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?”ஒருவர் : “எல்லோரும் ஊரை விட்டு ஓடிட்டாங்க. தலைவருக்கு வரவேண்டிய ஓட்டாச்சே அவ்வளவும்”...

டைரக்டரிடம் நிருபர்

நிருபர் : “ உங்க படத்தில கிளைமாக்ஸ்ல போயி, ‘ஜீவன்’ங்கிற கேரக்டரை அறிமுகப்படுத்தியிருக்கீங்களே… ஏன் சார்?டைரக்டர் : “ஜீவனுள்ள கிளைமேக்ஸ்னு எல்லோரும் சொல்லட்டுமேன்னுதான் சார்” ...

பொம்மைக்கிட்ட போய், ஓட்டு கேட்டா..


தொண்டன் : “ எங்க தலைவர் கண்ணு மண்ணு தெரியாம, தேர்தல் பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சிட்டார்.”நண்பன் : “என்ன சொல்றீங்க?”தொண்டன் : “ அங்க பாருங்க…. வயல்ல நிக்கிற பொம்மைக்கிட்ட போய், ஓட்டு கேட்டுட்டு வர்றதை”...

புடுங்குறதுலையும் ஸ்பெசலிஸ்ட்!

ஒருவன் : “ பல் டாக்டர் பரமசிவம்தான், நம்ம ஊர்லையே பல்லை புடுங்கறதுல ஸ்பெலிஸ்ட். ஆனா நீ அவர்கிட்ட போகாமா, வேற யார் கிட்டையோ போயிருக்கையே ஏன்டா?”மற்றவர் : “அவர் பில் புடுங்குறதுலையும் ஸ்பெசலிஸ்ட்னு கேள்விப்பட்டேன்…. அதான்”...

இரண்டு தொண்டர்கள்

தொண்டர் 1 : உங்க தொகுதி எம்.பி. டெல்லிக்கு ‘கோட்டு போட்டுகிட்டு’ போனாராமே?”தொண்டர் 2 : யார் சொன்னது…..? நாங்கெல்லாம் ஓட்டு போட்டுத்தானே அவர் போனார் !”...

''தலைவர் கால்நடையாத்தானே போனாரு''

அரசியல்வாதி 1 : “எங்க தலைவரு முதல்வர் கிட்ட மனு கொடுக்க போனப்ப, அவர்கூட 3 வெட்னரி டாக்டர்களும் போனாங்க.... தெரியுமா?”அரசியல்வாதி 2 : “வெட்னரி டாக்டரா… எதுக்கு?”அரசியல்வாதி 3 : “தலைவர் கால்நடையாத்தானே போனாரு”...

இனி எப்படி கருப்பு கொடி காட்டுவீங்க?

மாவட்ட செயலாளர்: “ எங்க தலைவருக்கு சமயோசித புத்தி ஜாஸ்தின்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்களே….?எதிர்க் கட்சிக்காரர்: “எப்படி சொல்றீங்க?”மாவட்ட செயலாளர்: “ எங்க போனாலும், மத்த கட்சிக்காரங்க, அவருக்கு கருப்பு கொடி காட்டிக்கிட்டேயிருக்காங்கன்னு, தன்னோட கட்சி கொடியையே கறுப்பு கலர்ல மாத்த முடிவு பண்ணிட்டாருய்யா”...

என்னப்பா இது…

ராமு: என்னப்பா இது…. உங்க தலைவரை, சட்ட சபைக்குள்ள டோலியில தூக்கிட்டுப் போறாங்க?”மாமு: “ எம் மேல இருக்கிற ஊழல் குற்றச்சாட்டு விலகும் வரை, நான் சட்டசபைக்குள்ள காலடி எடுத்து வைக்க மாட்டேன்று எங்க தலைவர் அறிக்கை விட்டது உனக்கு ஞாபகம் இல்லையா?”...

“ஓ டிக்கெட் வாங்கிட்டு வந்துட்டாரே''

ஒருவர் : “ டிக்கெட் வாங்காம வர்றதில்லைன்னு, வீராப்புடன் டெல்லி போனாரே …. உங்க தலைவர்…. வாங்கிட்டு வந்துட்டாரா?”மற்றவர் : “ஓ வாங்கிட்டு வந்துட்டாரே. வர்ற மூணாந்தேதி குலுக்கலாம். முதல் பரிசு ஒரு கோடியாம் அந்த டிக்கெட்டுக்கு!”...

இயக்குநரும், நிருபரும்


நிருபர்: “ உங்க படத்துக்கு ‘தேசிய விருது’ கிடைக்கும்னு நீங்க முன் கூட்டியே எதிர்பார்த்தீங்களா சார்?”இயக்குநர் : “இல்லையே…. படம் இப்படி ஃப்ளாப் ஆகும்னு யாராவது முன் கூட்டியே எதிர்பார்ப்பாங்களா என்ன?”...

நாய்க்கு, தங்க பிஸ்கெட்

மகேஷ் : “ பிரபல கடத்தல் மன்னன் வளர்த்த நாய் செத்துப்போச்சாமே? எப்படி?”தினேஷ் : “பின்னே… நாய்க்கு, தங்க பிஸ்கெட்டை போட்டு சாப்பிட வச்சிருக்கான்”...

'நட்புப் பாலம்' கட்டியதில் ஊழல்

அரசியல்வாதி 1: “எதுக்கு உங்க தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டு போறாங்க….?”அரசியல்வாதி 2: “அண்டை நாட்டுக்கு நட்புப் பாலம் கட்டியதுல ஏதோ ஊழல் செஞ்சிட்டாராம்”...

கணவனும் மனைவியும்

மனைவி : “ என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்”கணவன் : “ அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் ?”மனைவி : “ அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க”...

கிளீனிக்கில்

பேஷன்ட் 1 : “ என்னாதிது….? இந்த டாக்டர், வித்தியாசமா வேஷ்டி, சட்டை, துண்டு போட்டுட்டு இருக்காரே …?பேஷன்ட் 2 : “அவரு அரசியல்வாதியா இருந்தப்போ வாங்கின டாக்டர் பட்டமாம் அந்த ஞாபகத்துல இப்படி இருக்காரு”...

திருமண மண்டபத்தில்....


ஒருவர் : “ மாப்பிள்ளை வயசானவர்னு தெரிஞ்சே…. தன் பொண்ணை கொடுத்திருக்காங்க போலிருக்கு…”மற்றவர் : “எப்படி சொல்றீங்க?”ஒருவர் : “ பின்னே…. எட்டு பவுன்ல செஞ்ச தங்க பல் செட்டை மாப்பிள்ளைக்கு போடுறாங்களே!”...

-------------------------------- Thanks one india

A perfect place for Tamil Jokes and This is the Tamil Comedy Central Portal are Welcome to Tamil jokes online!! you need not download any tamil font to see the jokes.Tamil Jokes is one of the super collection of general, blade Jokes and other comedy stuff.There are wonderful people who crack jokes for us to laugh. Hope you all submit good jokes so that everybody can relax by reading it.